எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாதோ, அதி இங்கேயே கொடுக்கப்பட்டது

Sunday, June 17, 2007

உத்திரப்பிரதெச சட்டமன்ற தேர்தல்

நடந்து முடிந்த உத்திரப்பிரதெச சட்டமன்ற தேர்தலில் மாயாவதி பெற்ற வெற்றியானது தலித்துகளின் நூறாண்டு அரசியலுக்கு கிடைத்த வெற்றியாகும்.இது மற்ற மாநிலங்களிலும் தலித் அரசியலுக்கு ஒரு டானிக்காக அமையும்.ஆனால் இந்திய தேசியம் தேர்தலின் போது கிட்டதட்ட செத்துவிட்டது என கூறும் அளவிற்கு சாதிய கூட்டு வெற்றி அடைந்திறுக்கிறது.இது ஏதொ மாயாவதியின் அனுகுமுறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ஊடகங்கள் செய்திகளையும் விமர்சனங்கலையும் வெளியிட்டு வருகின்றன ஆனால் கீழ் வரும் காரணங்களெ முக்கியமானவை1.மாநில தேர்தல்கள் கிட்டதட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் குறிப்பிட்ட சமூகங்களின் கூட்டு வெற்றியடைவது போல் மாறிவிட்டன.2.தேர்தல்கள் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் களங்கள் என்ற நிலை மாறி சாதிகளின் போர்களங்களாக மாறியது3.இந்திய தேசியத்தின் வீழ்ச்சி.4.பிராமணர்கள் அரசியல்,நிர்வாகம் போன்றவற்றில் தாழ்த்தபட்ட்வர்களாக்கப்பட்டது.5.ஒவ்வொரு தெர்தலுக்குப்பின் வரும் அரசுகளின் மீதும் மக்கள் அடையும் ஏமாற்றம்.