முந்தித் தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திப் பகலாய்ச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன் ?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?
அரிசியோ நான் இடுவேன் , ஆத்தாள் தனக்கு ?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு ?
அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் ? - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு.
முன்னை இட்டதீ முப்புரத்திலே
பின்னை இட்டதீ தென் இலங்கையில்
அன்னை இட்டதீ அடிவயிற்றிலே
யானும் இட்டதீ முள்க! மூள்கவே!
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுமே பாவியேன் ஐயகோ! - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.
வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாதோ, அதி இங்கேயே கொடுக்கப்பட்டது
Tuesday, April 22, 2008
Friday, April 11, 2008
திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்
பெரியாரின் விருப்பத்திற்கு மாறாக அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். இதனால் திராவிட இயக்கம் அடைந்த பலன் என்ன, பாதகம் என்ன?
என்னைப் பொறுத்தவரை, அதிகாரப் பகிர்வு என்கிற விஷயத்தில் காந்தியை விட நேருவிடமும், பெரியாரை விட அண்ணா, கலைஞரிடமும் அதிக மரியாதை உண்டு. காரணம் இவர்கள் தங்கள் கைகளில் கறைபடிவதற்கு அனுமதித்துக் கொண்டார்கள். மார்க்சை விட லெனின் பெரிய ஆள். ஏனெனில் அவர் கொள்கைகளை மட்டும் பேசாமல் ஒரு அரசையும் நடத்த வேண்டியிருந்தது.
நீங்கள் நம்பும் ஒரு கொள்கையை, அரசு என்கிற இயந்திரத்தோடு தினந்தோறும் எதிர்கொள்வது மிகப்பெரிய சவால். இதுதான் மிகக்கடினமான பணி. அரசியலில் நுழையும்போது தன் மீது புழுதி வாரி இறைப்பார்கள் என்பதும், சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிவரும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் மாற்றம் என்பது அந்த அரசு இயந்திரத்தினால் தான் சாத்தியம் என்பதை அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள்.
வள்ளுவனாக இருப்பது சுலபம். வள்ளுவன் சொல்படி கேட்டு நடக்கிற அரசனாக இருப்பது கடினம். தத்துவத்தை முன்வைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் எழாது. தத்துவத்தை செயல்படுத்துபவன் சிலுவையை சுமக்க வேண்டியவனாக இருக்கிறான். எனவே அவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
என்னைப் பொறுத்தவரை, அதிகாரப் பகிர்வு என்கிற விஷயத்தில் காந்தியை விட நேருவிடமும், பெரியாரை விட அண்ணா, கலைஞரிடமும் அதிக மரியாதை உண்டு. காரணம் இவர்கள் தங்கள் கைகளில் கறைபடிவதற்கு அனுமதித்துக் கொண்டார்கள். மார்க்சை விட லெனின் பெரிய ஆள். ஏனெனில் அவர் கொள்கைகளை மட்டும் பேசாமல் ஒரு அரசையும் நடத்த வேண்டியிருந்தது.
நீங்கள் நம்பும் ஒரு கொள்கையை, அரசு என்கிற இயந்திரத்தோடு தினந்தோறும் எதிர்கொள்வது மிகப்பெரிய சவால். இதுதான் மிகக்கடினமான பணி. அரசியலில் நுழையும்போது தன் மீது புழுதி வாரி இறைப்பார்கள் என்பதும், சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிவரும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் மாற்றம் என்பது அந்த அரசு இயந்திரத்தினால் தான் சாத்தியம் என்பதை அவர்கள் அறிந்திருந்திருந்தார்கள்.
வள்ளுவனாக இருப்பது சுலபம். வள்ளுவன் சொல்படி கேட்டு நடக்கிற அரசனாக இருப்பது கடினம். தத்துவத்தை முன்வைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் எழாது. தத்துவத்தை செயல்படுத்துபவன் சிலுவையை சுமக்க வேண்டியவனாக இருக்கிறான். எனவே அவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
Tuesday, April 1, 2008
இணையதளங்கள்
எஸ். ராமகிருஷ்ணன் http://www.sramakrishnan.com
சாரு நிவேதிதா http://www.charuonline.com/
ஜெயமோகன் http://www.jeyamohan.in/
keetru http://www.keetru.com
match making
http://www.vedicprediction.com/matchmaking.html
http://www.scientificastrology.com/approve/Free_Vedic_Match.aspx
Tamil typing tool http://muthu.org/index.php?option=com_wrapper&Itemid=28
சாரு நிவேதிதா http://www.charuonline.com/
ஜெயமோகன் http://www.jeyamohan.in/
keetru http://www.keetru.com
match making
http://www.vedicprediction.com/matchmaking.html
http://www.scientificastrology.com/approve/Free_Vedic_Match.aspx
Tamil typing tool http://muthu.org/index.php?option=com_wrapper&Itemid=28
அழகிய பெரியவனின் கவிதைகள்
1. நான் பேசுகிறேன்
நறுக்கப்படுகிறது என் நாவு
முகம் இழக்கின்றன என் சொற்கள்
இன்னும் நான் பேசுகிறேன்
பறிக்கப்படுகிறது என் பேனா
கருச்சிதைகின்றன என் சொற்கள்
ஆயினும் நான் பேசுகிறேன்
முறிக்கப்படுகின்றன என் விரல்கள்
விசையிழக்கின்றன என் சொற்கள்
மேலும் நான் பேசுகிறேன்
பிடுங்கப்படுகின்றன என் கண்கள்
உயிர் இழக்கின்றன என் சொற்கள்
பின்னும் நான் பேசுகிறேன்
உயிர் விடைக்க
என் உடலே சொல்லாய் எழுகிறது
பேசாவிடில்
நான் சாவேன்
2. என் எண்ணத்தைப் பிட்டுனக்கு
தின்னத்தந்தேன் நேற்று
எண்ணம் உயிரைப் போன்றது
ஆகையால்
என் உயிரைத்தான் தந்தேன்
பின்பொருநாள்
என் கருத்தை செரிக்க முடியாமல்
உபாதை ஏற்பட்டதாகச்
சொன்னாய்
உனக்கு ஏற்கும் வகையில்
எந்த அளவுக்கு
என் சிந்தனையை
மசிய வேகவைத்துத் தர வேண்டும்
என்ற பக்குவம் தெரியவில்லை
உயிர்ச் சத்துகள்
வீணாகாமல் இருக்க
சில நேரத்தில் உணவு
அரைவேக்காட்டுப் பதத்தில்
இருக்க வேண்டும்
என்பது உனக்கும் தெரியும்
கருத்துச்சிக்கலும்
வயிற்றுச் சிக்கலும்
இப்படி முரண்படுகிறபோது
என்ன செய்யலாம் அன்பனே
எல்லாமும் ஏற்கும்படி
நீ உன்னை
பண்டிதம் பார்
எல்லார்க்கும் ஏற்கும்படி
நான் என்னை
மேலும் சமைக்கிறேன்
நறுக்கப்படுகிறது என் நாவு
முகம் இழக்கின்றன என் சொற்கள்
இன்னும் நான் பேசுகிறேன்
பறிக்கப்படுகிறது என் பேனா
கருச்சிதைகின்றன என் சொற்கள்
ஆயினும் நான் பேசுகிறேன்
முறிக்கப்படுகின்றன என் விரல்கள்
விசையிழக்கின்றன என் சொற்கள்
மேலும் நான் பேசுகிறேன்
பிடுங்கப்படுகின்றன என் கண்கள்
உயிர் இழக்கின்றன என் சொற்கள்
பின்னும் நான் பேசுகிறேன்
உயிர் விடைக்க
என் உடலே சொல்லாய் எழுகிறது
பேசாவிடில்
நான் சாவேன்
2. என் எண்ணத்தைப் பிட்டுனக்கு
தின்னத்தந்தேன் நேற்று
எண்ணம் உயிரைப் போன்றது
ஆகையால்
என் உயிரைத்தான் தந்தேன்
பின்பொருநாள்
என் கருத்தை செரிக்க முடியாமல்
உபாதை ஏற்பட்டதாகச்
சொன்னாய்
உனக்கு ஏற்கும் வகையில்
எந்த அளவுக்கு
என் சிந்தனையை
மசிய வேகவைத்துத் தர வேண்டும்
என்ற பக்குவம் தெரியவில்லை
உயிர்ச் சத்துகள்
வீணாகாமல் இருக்க
சில நேரத்தில் உணவு
அரைவேக்காட்டுப் பதத்தில்
இருக்க வேண்டும்
என்பது உனக்கும் தெரியும்
கருத்துச்சிக்கலும்
வயிற்றுச் சிக்கலும்
இப்படி முரண்படுகிறபோது
என்ன செய்யலாம் அன்பனே
எல்லாமும் ஏற்கும்படி
நீ உன்னை
பண்டிதம் பார்
எல்லார்க்கும் ஏற்கும்படி
நான் என்னை
மேலும் சமைக்கிறேன்
Subscribe to:
Comments (Atom)